districts

img

கோவில் மாநகரில் வழக்கு... அபராதம்... வழக்கு... அபராதம்

மதுரை, செப்.5- மதுரையில் வாகனங்கள் நிறுத்துவதற்கு புதிய முறையைக்  காவல் ஆணையர் ஜெ.லோக நாதன் திங்கள்கிழமை தொடங்கி வைத்தார். அப்போது பேசிய அவர்,  மதுரை நகர் போக்குவரத்துக் காவல்துறையினர் நான்கு மாசி  வீதிகள் மற்றும் நான்கு ஆவணி  மூல வீதிகளில் சாலையோரங்க ளில் மஞ்சள் கோடுகள் வரைந்தும், மஞ்சள் கயிறுகள் கட்டியும் வைத்துள்ளனர். இதற்குள் தான் இரு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்தவேண்டும் வாகனங்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால், மோட்டார்  வாகனச் சட்டத்தின்படி ஒழுங்கு படுத்துவது- செயல்படுத்துவது நகர்க் காவல்துறைக்கு பெரும் சவாலாக உள்ளது. முதற்கட்டமாக மீனாட்சி சுந்த ரேஸ்வரர் கோவிலைச் சுற்றி நிறுத்  தப்படும் வாகனங்களை ஒழுங்கு படுத்தும் வகையில், தனியாக வாக னங்கள் நிறுத்தும் இடங்களை காவல்துறையினர் கண்டறிந்துள்ள னர். அங்கு தான் வாகனங்களை நிறுத்த வேண்டும். இதற்கு வாகன  ஓட்டிகளின் ஒத்துழைப்பு அவசி யம். அப்போது தான் காவல்துறை  எந்தத் திட்டத்தையும் வெற்றிகர மாகச் செயல்படுத்த முடியும். முதல் முறை தவறு செய்ப வர்களுக்கு ரூ.500, மீண்டும் அதே குற்றத்தைச் செய்பவர்களுக்கு ரூ1,500 அபராதம் விதிக்கப்படும். வாகனத்தை மீட்டு எடுத்துச் செல்வ தற்கான கட்டணம் தனியாக வசூ லிக்கப்படும்.  கடந்த மாதம் போக்குவரத்து காவல்துறையினர் மேற்கொண்ட நடவடிக்கை குறித்துப் பேசிய லோகநாதன், ‘

நோ பார்க்கிங்’ பகு தியில் வாகனத்தை நிறுத்தியதற் காக 885 வழக்குகள், ஆபத்தான முறையில் வாகனம் ஓட்டியதற்காக 942, குடிபோதையில் வாகனம் ஓட்டியதற்காக 464, கைப்பேசியில்  பேசியதற்காக 657, இரு சக்கர வாக னத்தில் அளவுக்கதிகமாக ஆட் களை ஏற்றிச் சென்றதற்காக 372,  இரு சக்கர வாகனங்களில் செல்  லும் போது தலைக்கவசம் அணியா ததற்காக 28,506, நான்கு சக்கர  வாகனங்களில் சீட் பெல்ட் அணியா ததற்காக 313 வழக்குகளும் பதிவு  செய்யப்பட்டுள்ளது. மதுரை நகருக்குள் கனரக வாக னங்கள் காலை எட்டு மணி முதல்  இரவு 10 மணி வரை நுழைவதற்கு அனுமதியில்லை. சிசிடிவி படக்கருவிகள் பொருத்தப்பட்டுள்ளதால், பிர தானக் கட்டுப்பாட்டு அறையிலி ருந்து 24 மணி நேரமும் போக்கு வரத்தை காவல்துறையினர் உன் னிப்பாகக் கண்காணித்து வரு கின்றனர். இளைஞர்கள்- மாண வர்கள் போக்குவரத்து விதிகளைக் கண்டிப்பாகக் கடைப்பிடிக்க வேண்டும், மேலும் வாகனத்தின் பதிவு எண் (நம்பர் பிளேட்) மற்றும்  சைலன்சர் ஆகியவற்றில் ஏதே னும் மாற்றம் செய்தால் மோட்டார் வாகனச் சட்டத்தின்படி வழக்குப் பதிவு செய்யப்படும் என்றும் காவல் ஆணையர் லோகநாதன் கூறி னார்.